ஞாயிறு, 26 டிசம்பர், 2010

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இதுவரை சென்றது 
நல்ல விசயங்களுடன் 
சில தீமைகள் நம் வாழ்வில்
இனி பிறப்பது 
நன்மை தரும் விசயங்கள் மட்டுமே

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்


புதன், 8 டிசம்பர், 2010

உங்கள் நோக்கியா போன் திரையை தழைகீழாக மாற்ற



*#5512# திரையை வலது பக்கமாக திருப்ப

*#5513# திரையை தழைகீழாக திருப்ப

*#5514# திரையை இடது பக்கமாக திருப்ப

*#5511# திரையை சாதாரன நிலைக்கு கொண்டுவர

இவை பின்வரும் நோக்கியா போன்களில் சோதனை செய்யப்பட்டது

                        1200,  1208 , 1209, 
                        1600, 1650, 2310, 
                                 2600


புதன், 1 டிசம்பர், 2010

விண்டோஸ் XP யை மேலும் மெருகூட்ட Windows Smart Xp V.1 (2010)

விண்டோஸ் XP யை மேலும் மெருகூட்ட புதிய தீம்கள் அடங்கியது

Windows Smart Xp V.1 (2010)

இது Windows XP Professional SP3 அடிப்படையாக கொண்டது..

இதன் அளவு  577MB ஆகும்...



















இணையிறக்கம் செய்ய கீழே உள்ள் இணைப்புகளை

பயன்படுத்தவும்

http://www.fileserve.com/file/KJqksSa/SpX-laatest-ag112.part1.rar
http://www.fileserve.com/file/yVmfRmp/SpX-laatest-ag112.part2.rar
http://www.fileserve.com/file/dtgdVHK/SpX-laatest-ag112.part3.rar

மறக்கம கருத்துக்களை பதிவிங்க...

திங்கள், 22 நவம்பர், 2010

சிறந்த நெருப்பு நரி நிட்சிகள் - 1

நெருப்பு நரி சிறந்த இணைய உலாவியாகும்.


அதை மேலும் சிறப்பானதாக்க அதற்கான சிறந்த நீட்சிகள் பற்றி பார்ப்போம்.

1. Adblock Plus

 

பதிவிறக்கம் செய்ய இங்கு  செடுக்கவும்


  தேவைற்று தோண்றும் விளம்பர சாளரங்கள், விளம்பர படங்கள் முதலியவற்றை தடை செய்ய பயன்படுகிறது.

 

 

2. FlashGot 

 

 பதிவிறக்கம் செய்ய இங்கு  செடுக்கவும்

 

 FlashGot யை கொண்டு இணையபக்கங்களில் உள்ள இணைப்புகள், ஒலி கோப்புகள், நிகழ்படங்ள் ஆகியவற்றை ஒரே சொடுக்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்

 3. WOT (Web of Trust)

 

பதிவிறக்கம் செய்ய இங்கு  செடுக்கவும்


 பாதுகாப்பாக இணையத்தில் உலாவருவதை உறுதி செய்கிறது, இது பாதுகாப்பற்ற இணையபக்கங்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இது spy/ad/malware and viruses, browser exploites, phishing attempts, scamming போன்ற நச்சு நிரல்  உள்ள இணைய தளங்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

4. Easy YouTube Video Downloader

 

திவிறக்கம் செய்ய இங்கு  செடுக்கவும் 

 

இந்த நீட்சி YouTube வீடியோக்களை எளிமையாக பதிவிறக்கம் செய்ய

உதவுகிறது

5. FEBE (Firefox Environment Backup Extension)

 

 பதிவிறக்கம் செய்ய இங்கு  செடுக்கவும்


 நமது நெருப்பு நரியின் நீட்சிகளை எளிமையாக காப்பு நகல் (Backup) எடுக்க பயன்படுகிறது,  இந்த நீட்சிகளை மீண்டும் நெருப்பு நரியில் இணைக்க தக்க வகையில்  .xpi வடிவ கோப்பக சேமிக்கிறது. மேலும் இந்த .xpi கோப்புகளை USB யிலும் சேமிக்க வகை செய்கிறது, இதனால் ஒரு கணினியில் உள்ள நெருப்பு நரி நீட்சிகளை போன்றே மற்ற கணினியிலும் நீட்சிகளை அமைக்கலாம்.

தொடரும் ...

 

                    அட கைய விடுப்பா  

 

                                                

  நந்தகுமார்

 

ஞாயிறு, 7 நவம்பர், 2010

வியாழன், 30 செப்டம்பர், 2010

பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி


ஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..பெரிய கோயில் அளவுகோல்...எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.சாரங்களின் அமைப்புகருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன.  சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது.  இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு.  இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, 
சோழர் சிலை
அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 


சோழர் நகரம்!


தெருக்கள்(தஞ்சாவூர்ப் புறம்படி)காந்தர்வத் தெரு, மடைப்பள்ளித் தெரு,  வில்லிகள் தெரு,  ஆணைகடுவார் தெரு,  ஆனை ஆட்கள் தெரு,  பன்மையார் தெரு, சாலியத் தெரு. பெருந்தெருக்கள்மும்முடிச்சோழப் பெருந்தெரு, நித்தவினோதப் பெருந்தெரு, வீரசிகாமணிப் பெருந்தெரு, வீரசோழப் பெருந்தெரு, செயங்கொண்ட சோழப் பெருந்தெரு, இராசவித்யாதரப் பெருந்தெரு, சூரசிகாமணிப் பெருந்தெரு.சோழ மன்னர்கள் பெயரில் ஆறுகள்முடி கொண்ட சோழப் பேராறு, தண் பொருத்தமான முடி கொண்ட சோழப் பேராறு,  சுங்கந் தவிர்த்த சோழப் பேராறு, அகளங்கப் பேராறு, மதுராந்தக வடவாறு, வீரசோழ வடவாறு,  வீரராசேந்திர சோழ வடவாறு, விக்கிரமனாறு, கரிகாலச் சோழப் பேராறு (கொள்ளிடம்),  வீரசோழனாறு. பேரங்காடி(தற்போதைய சூப்பர் மார்க்கெட் முறை) திரிபுவன மாதேவி பேரங்காடி.

சோழர்கால நாணயங்கள்  
 கி.பி. 985}1014 காலகட்டத்தில் இலங்கையில் ராஜராஜ சோழனால் புழக்கத்துக்கு விடப்பட்ட தங்க நாணயங்கள்.

புதன், 22 செப்டம்பர், 2010

எபிக் - 3

எபிக் இணைய உலாவியில் Side Bar ல் 1500 பயன்பாட்டுத் தொகுப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
அதில் சமூக வலை தளமான பேஸ்புக், டிவிட்டர், மின்னஞ்சல் தளமான
Gmail, இண்டியா டுடே,  Citi Bank போன்றவைகள் முக்கியமானவைகள் ஆகும்.

இத்துடன் 1000 க்கு மேற்பட்ட நெருப்புநரி plugins களையும் பயன்படுத்தலாம்

    குக்கிகளை எளிமையாக நீக்கலாம்,
Private Browsing க்கும் ஆதரவு தருகிறது. இதனால் நமது Browsing Reports சேமிக்கப்படுவதில்லை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த எபிக் இணைய உலாவிக்கு மாறுவோம்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

எபிக்-2 (Epic)

எபிக்-2 (Epic)

எபிக்கின் வேகம்

    எபிக் இணைய உலாவி நெருப்பு நரியை (Fire Box) அடிப்படையாக கொண்ட திறமூல மென்பொருளாகும்,
எனவே இது அதிவேகமாக செயல்படுகிறது. இணைய பக்கங்களை மின்னல் வேகத்தில் திறக்கிறது.

இந்திய மொழிகளின் ஆதரவு.


    இது இந்திய தயாரிப்பு, எனவே இந்திய மொழிகளை மிகவும் சிறப்பாக ஆதரிக்கிறது, மிகவும் எளிமையாக 
தட்டச்சு செய்யவும் முடிகிறது.





    இதை மிகவும் எளிமையாக செயல்படுத்த முடியும். எபிக்கின் Side Barல் உள்ள இன்டிக் என்பதனை சுட்டும்போது,
Epic Indic Text என்ற விண்டோ தோன்றுகிறது. அதில் default மொழியாக தமிழை தேர்வு செய்து எழிமையாக தமிழை தட்டச்சு செய்யலாம்.



ஒருங்கிணைந்த Antivirus ஐ எவ்வாறு செயல்படுத்துவது.

    Side Bar-ல் உள்ள  நச்சு நிரல் எதிர்ப்பானை(Antivirus) ஐ கிளிக் செய்யாவேண்டும். Epic உடன் ESET NOD32 Antivirus 4 இணைக்கப்பட்டுள்ளது, இத்துடன்
Antispyware & ESET Smart Security 4 Firewall & Antispam போன்ற பாதுகாப்பும் உள்ளது, இவை அனைத்தும் சுமார் 1199 விலை உள்ளது.



    இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் பதிவிறக்க கோப்புகளை சோதிப்பதோடு மட்டுமின்றி, நமது கணினியையும் சோதித்து நச்சு நிரல்களை
நீக்குகிறது.


  

Epic இணைய உலாவியின் தீமை மாற்றுதல்.

    Side Bar-ல் உள்ள ஸ்கின்ஸ் (Skins) என்பதனை கிளிக் செய்யும்போது நமக்கு பல்வேறு Skins அடங்கிய விண்டோ திறக்கிறது. அதில்
பல்வேறு தலைப்புலகளின் கீழ் ஆயிரக்கணக்கான தீம்கள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது.
   
    கலை, கலாச்சாரம், மக்கள், விளையாட்டு, மொழி, இசை, அரசியல், இயற்கை போன்ற பல்வேறு தலைப்புகள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது.



பிராந்தியம் என்ற தலைப்பில் சென்றால் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, போன்ற பிரிவுகளின் கீழ் வாகைபடுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்புகளை கொண்ட தீம்களில் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.


தொடரும்...
 

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

இந்திய தயாரிப்பு புதிய இணைய உலாவி Epic

இந்தியர் என்பதில் பெருமிடம் கொள்வோம், ஆம் நமது பெங்களூருவை சேர்ந்த இந்திய நிறுவனம்
Hidden Reflex Epic Browser என்ற புதிய இணைய உலாவியை மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ளது.

   
    இந்த இணைய உலாவியின் தற்போதைய வடிவமைப்பு எண் Epic Browser 1.1 ஆகும், இது
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

    1. AntiVirus Scanner உள்ளினைந்தது
    2. word processor உள்ளினைந்தது
    3. இத்துடன் Facebook, Twitter, Gmail, Orkut, Yahoo, Downloads, போன்ற 1500 க்கு மேற்பட்ட
          Applications களை தன்னிடத்தே கொண்டுள்ளது.
        4. இத்துடன் உங்கள் உலாவியை அழகுபடுத்த பல வகையான தீம்கள் இணைக்கப்பட்டுள்ளது.



இவற்றையெள்ளாம்விட இது ஒர் இந்திய தயாரிப்பு என்பதெ இதன் முக்கிய சிறப்பாகும்.


பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

தொடரும் ...

வெள்ளி, 30 ஜூலை, 2010

உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வெளி

வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார்.

விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு "உண்மை வரலாறுகள் (True Histories)" என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.
அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி பற்றிக் குறிப்பிடத் தகுந்த நூல் எதுவும் வெளி வரவில்லை. இருப்பினும், நிலவைப் பற்றியும், விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் புதிர்களைப் பற்றியும் விளங்கிக் கொள்ள மக்கள் முயன்றே வந்துள்ளனர்.
நிக்கலஸ் கோபர்நிகஸ் என்ற போலந்து நாட்டு வானியல் வல்லுநர் தன்னுடைய ஆய்வுகளின் முடிவில், இந்த அண்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், இப்புவி ஒரு கோள் என்றும் கூறினார். இத்தாலி நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ 1610-ல் ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன் வாயிலாக விண்வெளியையும், நிலவின் மேற்பரப்பையும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.
நிலவைப் பற்றியும், பிற கோள்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளைக் கலிலியோ கண்டறிந்து வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் மக்களால் வரவேற்கப்படவில்லை. எனினும், ஒரு சில அறிஞர்கள் மட்டும் அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அப்போது முதலே விண்வெளிப் பயணம் பற்றிய முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் எனலாம்.

வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். முதலாவது வழியில், தெய்வீக சக்தி ஒன்று மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லக் கூடும். இரண்டாவது, ஆற்றல் மிக்க மிகப் பெரிய பறவைகள் துணையுடன் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்ததாக மிகப் பெரிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு மனிதனே நிலவிற்குப் பறந்து செல்லலாம். நான்காவதாக, பறக்கும் எந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து, அதில் அமர்ந்து நிலவுக்குச் செல்லலாம். இவையே அவர் கூறிய 4 வழிகள்.
பின்னர் ஐசக் நியூட்டன் விண்வெளி பற்றிப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அவரது இயக்க விதிகள் (laws of motion) புதியதோர் அறிவியல் சிந்தனையை உலகிற்கு அளித்தது. புவியை விட்டு உயரே செல்லச் செல்ல, புவியின் ஈர்ப்பு விசை குறைந்து கொண்டே போகும் என்பதை அவர் நிரூபித்தார். மேலும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், விண்மீன்கள் முதற்கொண்டு சின்னஞ் சிறு துகள்கள் வரை அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உடையவை என்றும், அக்கவர்ச்சி விசையே ஈர்ப்பு விசை எனவும் நிரூபித்தார்.
விண்வெளிப் பயணத்தில் நியூட்டனின் ஈர்ப்புவிசை விதிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்விதியின் அடிப்படையிலேயே, புவியின் கவர்ச்சி விசையிலிருந்து விண்வெளி ஓடத்தின் தப்பித்தல் திசை வேகம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், நியூட்டன் கண்டுபிடித்த மூன்று இயக்க விதிகளும் விண்வெளிப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சுமார் 475 ஆண்டுகட்கு முன்பு வான்-ஹூ என்ற சீனர் நெருப்பு ஏவுகணை (fire rocket) ஒன்றைத் தயாரித்தார். நாற்காலி வடிவ ஊர்தி ஒன்றில் 47 ஏவுகணைகளில் வெடிப் பொருளை நிரப்பி அது உருவாக்கப்பட்டது. இதன் மீது அமர்ந்து கொண்டு விண்வெளியில் பறக்க இயலும் என அவர் நம்பினார். ஆனால் ஏவுகணைகளில் தீப்பற்றியவுடனே, அவர் உயரே தூக்கி எறியப்பட்டு, அதே வேகத்தில் தரையில் விழுந்து உயிர் இழந்தார்.
வான்-ஹூ அவர்களின் ஆய்வு தோல்வியில் முடிந்தாலும், அறிவியல் அறிஞர்கள் விண்வெளிப் பயணத்திற்குத் தகுதியான ஊர்தியைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. வில்லியம் காங்கிரேவ் என்ற இங்கிலாந்து நாட்டுப் போர்ப்படை அதிகாரி 1808ஆம் ஆண்டு துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்கத் துவங்கினார். இத்தகைய ஏவுகணைகள் கடற் சண்டையில் பெரும் வெற்றியை ஈட்டித்தரும் என்று அவர் நம்பினார். அவர் கண்டுபிடித்த இவ்வகை ஏவுகணைகள் 1812-ல் அமெரிக்காவுடன் நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டன.
ஏவுகணையைப் பயன்படுத்தி அண்டவெளியை ஆய்வு செய்வது பற்றிய நூல் ஒன்றை கான்ஸ்டான்லின் சிலோவ்ஸ்கி என்ற இரஷ்ய நாட்டு அறிஞர் 1898-ல் எழுதி வெளியிட்டார். விண்வெளிப் பயணத்திற்குப் புதியதோர் துவக்கமாக இந்நூல் விளங்கியது.

அமெரிக்க-ஜெர்மன் நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து திரவ எரிபொருளைப் பயன்படுத்திச் செலுத்தும் ஏவுகணைகளை 1920-ல் உருவாக்கினர். முன்பு சொல்லப்பட்ட இரஷ்ய விஞ்ஞானியும் திரவ எரிபொருளைப் பற்றிக் கூறி இருந்தார். ஆயினும் அப்போது அவர் கருத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.ஏவுகணை வடிவமைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கோடர்ட் என்பவரும் முக்கிய பங்காற்றினார். அவரது முயற்சியால் துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணை உருவாக்கப்பட்டது. மேலும் திரவ எரிபொருளால் இயங்கும் ஏவுகணையிலும் அவர் ஆர்வம் காட்டினார். திட எரிபொருளை விட, திரவ எரிபொருள் அதிக ஆற்றல் வழங்குவதாக அவர் கண்டறிந்தார்.
கோடர்ட் பயன்படுத்திய திரவ எரிபொருளானது, பெட்ரோலில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட கேசொலின் (Gasoline) ஆகும். இந்த கேசொலினை எரிக்கத் திரவ உயிர்வளி (oxygen) பயன் படுத்தப்பட்டது. வளிம நிலையிலுள்ள உயிர்வளியானது அழுத்தத்தினால் குளிர்விக்கப்பெற்று திரவ நிலைக்கு மாற்றப்பட்டது. இதனை "லாக்ஸ் (lox)" எனக் கூறினர்.
திரவ எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட முதலாவது சோதனை ஏவுகணையை கோடர்ட் 1926-ல் செலுத்தினார். ஆனால் அந்த ஏவுகணை அதிக உயரம் செல்லவில்லை. எனினும் 1929-ல் மேலும் ஒரு ஏவுகணை அவரால் செலுத்தப்பட்டது. அது சுமார் 90 அடி உயரம் விண்ணில் சென்று, கட்டுப்பாடு குறைவு காரணமாகத் தரையில் விழுந்துவிட்டது. சுழலாழிக் கருவியைப் (gyroscope) பயன் படுத்தி இந்தப் பிரச்சினையையும் கோடர்ட் தீர்த்து வைத்தார். சுழலாழிக் கருவி என்பது விரைந்து சுழலும் ஒரு சக்கரம்; இச்சக்கரத்தின் அச்சு ஒரு குறிப்பிட்ட திசையில் எளிதாகத் திரும்பக் கூடியது.
கோடர்ட் செலுத்திய இறுதி ஏவுகணை, மணிக்கு 550 கி.மீ. வேகத்தில், விண்வெளியில் சுமார் 1.25 மைல் தூரம் சென்றது. இரண்டாம் உலகப் போரின் போது அவர் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார். குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களை மிகச் சிறிய இடத்திலிருந்து விண்ணுக்குச் செலுத்தக் கூடிய துணை உந்து கலங்களையும் கோடர்ட் வடிவமைத்தார். மேலும் அவர் வி-1, வி-2 என்ற ஏவுகணைகளைப் போரில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியில் உருவாக்கினார். இவற்றின் முன்னேறிய வடிவங்களே எதிர்காலத்தில் விண்வெளி ஓடங்களாக உருவெடுத்தன.
வார்னர் வான் பிரான் (Warner Von Braun) என்ற ஜெர்மன் நாட்டு ஏவுகணைப் பொறியாளர் இரண்டாம் உலகப் போரின் போது தமது நாட்டை விட்டு அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அவர் விண்வெளி ஆய்வுக் குழுவுக்குப் பொறுப்பேற்றார். அவர் தலைமையில்தான் எக்ஸ்ப்ளோரர்-1 என்ற துணைக்கோள் (Satellite) வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. அடுத்து அவரது மேற்பார்வையில் சாட்டர்ன் (Saturn) ஏவுகணையும் தயாரிக்கப்பட்டது. முதல் முறையாக புவியிலிருந்து நிலவிற்கு மனிதர்களைக் கொண்டு செல்ல இதுவே பின்னர் பயன்படுத்தப்பட்டது. சிறு வயது முதலே வெர்னர் பிரான் விண்வெளியின் வியத்தகுக் காட்சிகளைக் காண்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவரது தாயாரும் சிறு தொலைநோக்கி ஒன்றை மகனுக்கு அளித்து அவரது ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்தார். பின்னாளில் வெர்னர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக வளர்ந்தார்.
சோவியத் யூனியன் 1957 அக்டோபர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைத் துணைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது. உலகம் முழுதும் இச்செயலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தது எனலாம். இச்செயற்கைத் துணைக்கோள் சிறியதொரு நிலவை ஒத்திருந்ததோடு, புவியை 90 நிமிடங்களில் சுற்றி வந்தது. புவியிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இந்தச் செயற்கைத் துணைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்து 1958 ஜனவரி 31-ல் அமெரிக்கா எக்ஸ்ப்ளோரர்-1 என்ற தனது துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மாறி மாறி துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தின. விண்வெளிக் கண்டுபிடிப்புகள் பலவற்றில் ஈடுபட்டு நிலவுக்குச் செல்லும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டன.
சோவியத் யூனியன் ஸ்புட்னிக்-1ஐத் தொடர்ந்து மற்றொரு விண்வெளிக்கலமான ஸ்புட்னிக்-II-ஐச் செலுத்தியது. அதில் லைகா என்ற பெயர் கொண்ட பெண் நாய் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாரம், பல இன்னல்கள் நிறைந்த விண்வெளிச் சூழ்நிலையில் அந்த நாய் இருந்து உயிர் வாழ்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனவே விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதலாவது உயிரினம் என்ற பெருமை லைகா என்ற அந்தப் பெண் நாய்க்குக் கிடைத்தது.
விண்வெளிப் பயணத்தின் திருப்பு முனையாக, 1969 ஜூலையில், மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் குறிப்பிடலாம். அமெரிக்கா அனுப்பிய விண்வெளிக்கலமான அப்பலோ-II, நெயில் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் இ ஆல்ட்வின் ஆகிய இரு விண்வெளிப் பயணிகளுடன் 1969 ஜூலை 20-ல் நிலவில் சென்று இறங்கியது.
பின்னர் பல துணைக்கோள்கள் பல்வேறு நாடுகளால் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு முக்கிய தகவல்களை ஒளிப்படங்களாக அனுப்பி வைத்தன. அப்படங்களின் அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளின் வரை படங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் வானொலி, தொலைக்காட்சி ஆகிய தகவல் தொடர்பு அமைப்புகளில் துணைக்கோள் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை விளைவித்தது. முக்கியமாக நான்கு வகையான துணைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை 1) கூர்ந்து நோக்கித் தகவல் திரட்டும் துணைக் கோள்கள், 2) தட்பவெப்பம் அறிவிக்கும் துணைக்கோள்கள், 3) தகவல் தொடர்புத் துணைக்கோள்கள், 4) பிறகோள்கள், விண்மீன்கள் பற்றிய தகவல்களைத் தந்து வழிகாட்டும் துணைக்கோள்கள் என்பனவாம்
புவியில் உள்ள பல இடங்களைப் பற்றிய சரியான தகவல்களையும், படங்களையும் அனுப்பி இதுவரை புரியாத புதிராக இருந்த பலவற்றிற்கு முதல் வகைத் துணைக்கோள்கள் விடையளித்தன. புவியிலுள்ள காடுகள், மலைகள், எரிமலைகள், கனிம வளங்கள், பனிப்பகுதிகள் ஆகியன பற்றிய பல விவரங்களை இவ்வகைத் துணைக்கோள்கள் அனுப்பி வைத்தன.
தட்பவெப்பத் துணைக்கோள்கள் அனுப்பும் தகவல்கள் வாயிலாகப் புயல், நிலநடுக்கம், பெருமழை, சூறாவளி பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிய முடிவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிகிறது.
அடுத்த வகைத் துணைக்கோள்களால் தகவல் தொடர்பு அமைப்பில் பெரும் புரட்சியே விளைந்துள்ளது. ஒரே ஒரு துணைக்கோளின் வாயிலாக பல ஆயிரம் தொலை பேசிகளைச் செயற்படுத்த முடிகிறது. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உலகின் எந்த மூலையிலும் ஒலி/ஒளி பரப்பச் செய்ய முடியும். அடுத்து, சில சிறப்பு வகைத் துணைக்கோள்களைப் பயன்படுத்திப் பிற கோள்களின் விவரங்களைப் பெற இயலும்.

வெள்ளி, 14 மே, 2010

பொறியியல் மட்டுமே படிப்பா?

புற்றிசல் போல் தமிழகத்தில் தற்போது எங்கு நோக்கினும் பொறியியல் கல்லூரிகள். எந்த மாணவரைக் கேட்பினும் பொறியியல் மாணவர்கள். ஆண்டுக்கு 50-புதிய பொறியியல் கல்லூரிகளேன தற்போது தமிழகத்தில் சுமார் 427 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதைத்தவிர பல பல்கலைக்கழகங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் பொறியியல் படிப்புகளை கணக்கு வரையற்ற அளவில் வழங்கி வருகின்றன.

ஆண்டுக்கு சுமார் இரண்டு இலட்சம் பொறியியல் மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமிருந்து வெளிவருகின்றனர். இப்படி பொறியியல் பற்றியதான மோகம், தமிழகத்தில் முற்றிவிட்டதன் காரணம் பொறியியல் படித்துமுடித்தவுடன் கைநிறைய சம்பளம் பன்னாட்டு நிறுவனங்களில் கிடைத்துவிடுகிறது என்கிற நம்பிக்கைதான். இதில் உண்மையும் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பாக.ஆனால், தற்போது நிலைமை வேறு. பொருளாதார வீழ்ச்சி, பொருளாதார தேக்கநிலை என உலகப் பொருளாதாரமே தள்ளாட்டம் கண்டுவிட்ட நிலையில் புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் நிறுத்தப்பட்டுவிட்டன. பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் கூட அதிகளவில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது. இந்த சூழ்நிலையில் மந்தை மந்தையாக பொறியியல் படிப்பினை படிப்பது புத்திசாலித்தனமாககுமா என்பதை சிறிது பொறுமையுடன் யோசிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஓரளவிற்கு உயர்ந்த/சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிட்டவர்களுக்கு அவ்வளவாக பாதிப்பு இல்லை. காரணம், அவர்களுக்கு வளாகத் தேர்விலேயே வேலை கிடைத்துவிடும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், இந்த உப்புமா கல்லூரிகளில் படிப்பவர்களின் நிலைதான் பெரும் திண்டாட்டம்/போராட்டம். படிப்பு முடித்தும் கூட வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஒண்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவது இந்த உப்புமா கல்லூரி மாணவர்கள் தான். பணத்தை வாரியிறைத்தும் தன் மகனுக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் பெற்றோருக்கு இருப்பது தொடர்கதையே. அரசே, எல்லோருக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவது என்பது இயலாத காரியம். தற்போது ஓரளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்திருப்பதன் காரணம் தனியார் நிறுவனங்களின் அசுரவளர்ச்சி தான். ஆனால், இவர்களும் தற்போது கடுமையான நிதிநெருக்கடியினால் முன்புபோல வேலைவாய்ப்பினை வாரிவழங்குவது கிடையாது.

மென்பொருள் நிறுவனங்களைப் பொறுத்தவரை அனுபவத்திற்கு மட்டுமே முதல்நிலை. படிப்பெல்லாம் கடைநிலை தான். ஆதலால், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமெனில் கட்டாயம் பொறியியல் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஓரளவிற்கு சிறந்த கல்லூரியில் B.Sc (Maths, Physics, Chemistry. IT), B.C.A., B.Com.,B.A(Economics) & Diploma படித்தவர்கள் கூட மென்பொருள் நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்தில் சேரமுடிகிறது. பொறியியல் படித்தவர்களும், இவர்களும் ஒரே சம்பளத்தைத் தான் பெறுகின்றனர். அப்படியிருக்க ஏன் அநாவசியமாக பணத்தை இறைத்து பொறியியல் படிக்க வேண்டும்?

எண்ணற்ற கலைப்பாடங்கள் தற்போது வழக்கொழிந்து வருவது வேதனைக்குரியது. வாழ்க்கையை ரசிக்கக் கற்றுத்தருவது கலைப்பாடங்கள் தான் என்றால் அது மிகையாகாது. அத்தகைய கலைப்பாடங்கள் மறைந்துவருவது துரதிருஷ்டவசமானது. மறைந்துவருவதன் காரணம் இத்தகைய படிப்புகள் உடனடி வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதில்லை என்பதுதான். மேலோட்டமாகப் பார்த்தால் இதில் உண்மையிருப்பதாகவே தோன்றும்.ஆனால், உண்மையில் எல்லாப் பாடங்களும் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவன தான்.அதற்கு, நாம் நம்மை எந்தளவுக்கு தயார்படுத்திக்கொள்கிறோம் என்பதனைப் பொறுத்தது.

பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு கல்லூரிகள் மிகவும் குறைவு. ஆனால், அம்மாநிலத்திலிருந்துதான் பல IAS, IPS ஆண்டுதோறும் வெளிவருகிறார்கள். எப்படி? அங்கு ஆரம்பத்திலிருந்தே போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கேற்ற படிப்பினையே(B.A – History, Political Science, Sociology, Economics) தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்வுகளிலும் எளிதாக வெற்றிபெறுகிறார்கள். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை யாவரும் அறிந்தது பொறியியல் படிப்புகளும் அதுசார்ந்த வேலைவாய்ப்புகளும் தான். தமிழகத்தில் எத்தனை C.A., இருக்கிறார்கள்? வடமாநிலங்களில் B.Com., படித்துவிட்டு மூன்றாண்டுகளிலேயே C.A., யும் முடித்துவிட்டு இலட்சங்களில் ஊதியம் பெறுகின்றனர்.

சமீபத்தில் பத்திரிக்கையில் படித்த செய்தி என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலூர் அரசு கலைக்கல்லூரியில் M.A History படிக்க கூவிக்கூவி அழைத்தும் யாரும் படிக்க முன்வரவில்லை. இத்தனைக்கும் படிப்புக் கட்டணம் வெறும் ரூ.5 மட்டும் தான். இம்மாதிரியான கலைப்பாடங்களை படிக்க அரசு ஊக்குவிப்பது கிடையாது. அதுமட்டுமல்லாது, குறைந்தளவு மாணவர் சேர்க்கையிருப்பின் அப்பாடங்களை மூடிவிடவும் அறிவுரை வழங்கியுள்ளது. பொறுப்புள்ள அரசாக செயல்படாமல் வணிகநோக்கில் செயல்படும் அரசின்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, தமிழ்பாடங்கள் தமிழகத்தைவிட்டு மறைந்து வருகிறது. தமிழ் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் மற்ற பாடங்களும் மறைந்துவிட்டதெனில் தமிழக மாணவர்கள் எந்திரத்தன்மையில் தான் செயல்படுவர்.

புதன், 17 மார்ச், 2010

India's Most Important Phone Nos


Airlines
Indian Airlines -1800 180 1407
Jet Airways - 1800 22 5522
Spice Jet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
Kingfisher - 1800 180 0101
============ =========

Banks
ABN AMRO -1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporation Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655
========== ========= ========= 

Automobiles
Mahindra Scorpio -1800 22 6006
Maruti - 1800 111 515
Tata Motors - 1800 22 5552
Windshield Experts - 1800 11 3636
============ ========= ====
Computers/IT
Adrenalin -1800 444 445
AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
Xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004
============ ========= ==

Indian Railway Enquiries
Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9
============ ========= ========= ========= ========= 

Couriers/Packers & Movers

ABT Courier -1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171
============ ========= ========= ======

Home Appliances

Aiwa/Sony -1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432
============ ========= ========= =========

Investments/ Finance
CAMS -1800 44 2267
Chola Mutual Fund - 1800 22 2300
Easy IPO's - 3030 5757
Fidelity Investments - 1800 180 8000
Franklin Templeton Fund - 1800 425 4255
J M Morgan Stanley - 1800 22 0004
Kotak Mutual Fund - 1800 222 626
LIC Housing Finance - 1800 44 0005
SBI Mutual Fund - 1800 22 3040
Sharekhan - 1800 22 7500
Tata Mutual Fund - 1800 22 0101
============ ========= =========

Travel

Club Mahindra Holidays -1800 33 4539
Cox & Kings - 1800 22 1235
God TV Tours - 1800 442 777
Kerala Tourism - 1800 444 747
Kumarakom Lake Resort - 1800 44 5030
Raj Travels & Tours - 1800 22 9900
Sita Tours - 1800 111 911
SOTC Tours - 1800 22 3344
============ ========= ========= ====

Healthcare
Best on Health -1800 11 8899
Dr Batras - 1800 11 6767
GlaxoSmithKline - 1800 22 8797
Johnson & Johnson - 1800 22 8111
Kaya Skin Clinic - 1800 22 5292
LifeCell - 1800 44 5323
Manmar Technologies - 1800 33 4420
Pfizer - 1800 442 442
Roche Accu-Chek - 1800 11 45 46
Rudraksha - 1800 21 4708
Varilux Lenses - 1800 44 8383
VLCC - 1800 33 1262
============ ========= ========= ===

Insurance
AMP Sanmar -1800 44 2200
Aviva - 1800 33 2244
Bajaj Allianz - 1800 22 5858
Chola MS General Insurance - 1800 44 5544
HDFC Standard Life - 1800 227 227
LIC - 1800 33 4433
Max New York Life - 1800 33 5577
Royal Sundaram - 1800 33 8899
SBI Life Insurance - 1800 22 9090
============ ========= ========= =======

Hotel Reservations
GRT Grand -1800 44 5500
InterContinental Hotels Group - 1800 111 000
Marriott - 1800 22 0044
Sarovar Park Plaza - 1800 111 222
Taj Holidays - 1800 111 825
============ ========= ========= ======

Teleshopping
Asian Sky Shop -1800 22 1800
Jaipan Teleshoppe - 1800 11 5225
Tele Brands - 1800 11 8000
VMI Teleshopping - 1800 447 777
WWS Teleshopping - 1800 220 777
============ ========= ========= ========

Others
Domino's Pizza -1800 111 123
============ ========= ========= ====

Cell Phones
BenQ -1800 22 08 08
Bird CellPhones - 1800 11 7700
Motorola MotoAssist - 1800 11 1211
Nokia - 3030 3838

சனி, 13 பிப்ரவரி, 2010

யோக முத்திரைகள்

நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச
பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப்
பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க
முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே
காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது
உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

தினமும்
காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து
தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும்
விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.

சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!

தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு
தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால்
மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம்
முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி
கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!


மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு,
செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான
நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி
வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக்
கொள்ளவும்.

காது நன்கு கேட்க!

காதில்
வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு
உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து
போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya
) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!

மனம்
மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய்
வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா?
அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல்
நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில்
அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும்
புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து
விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல்
நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!


இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும்
சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக்
கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த
கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை
குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!

உடலுக்குத்
தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு
அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல்
கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!

நம்
உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை
செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச்
சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல்
நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு
தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!

இரண்டு
உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக்
கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப்
பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று
நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது
போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை
கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால்
பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( ling
) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.

நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை

நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(apan
vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில்
இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல்,
நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....

வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.

இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை

இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான(


vyana

) முத்திரை என்று இதற்குப் பெயர்.

எல்லா
வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள்
வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன்
உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத்
திகழும்.

திங்கள், 1 பிப்ரவரி, 2010

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.
சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும். இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக்கும்.
அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்டமும் அடைவார்கள். பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையில் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவதும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு.
இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது. எனவே, இவர்கள் தம்மையே சுய பரிசோதனை செய்துகொண்டு, தாம் இந்தப் பதட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு என்ன வழி?
பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!
முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் என நினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.
ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன? எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.
உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லாதீர்கள். 'எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்' என்பார் அவ்வைப்பிராட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.
நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.
காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.
தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம், யோகா, பிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதை ப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.
உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்துவிடுங்கள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர்மறையாக விமர்சிக்கும், கேலி செய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச்சிந்தனை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுடன் உங்கள் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக் கற்பனை செய்து பாருங்கள்.
அழகாக, கம்பீரமாக உடையணியுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கையில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங்கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள்.
தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது. நீங்களாகவே பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப் பகிர்ந்துகொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அலுவலகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்திப்பாருங்கள்.
கொஞ்ச நாளில் 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone' என்பீர்கள்

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

மனித மூளை

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.

மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

மூளையின் படிவளர்ச்சியில், மிக முந்திய சிறிய பாலுட்டியான மூஞ்சூறில் இருந்து மனிதக் குரங்கு வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை மூளைப் பருமனாக்கம் (encephalisation) என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 பில்லியன் (5000-10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

மனித மூளை, தடிப்பான மண்டை ஓட்டின் எலும்புகளாலும், மூளை முதுகுத் தண்டுநீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.



பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் இரத்தத் தடை (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்று நோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புகளை தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டிரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்று நோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை பாக்டிரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, எதிர்ப்பொருள் (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை உயிர் அணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், பார்கின்சன் நோய், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச் சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன.

வியாழன், 28 ஜனவரி, 2010

சீன பொருளாதாரம் உயர்வு : இரண்டாம் இடத்தை நெருங்குது

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் அதன் வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாக அமைந்துள் ளது. உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,), தற்போது அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை இரண்டாமிடத்திலிருந்து ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி சீனா அதிவேகமாக இரண்டாமிடத்தை நோக்கி வளர்ந்து வருகிறது.


அந்நாட்டின் "தேசிய புள்ளியியல் பீரோ' அமைப்பின் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் சில்லரை வர்த்தகம் 15. 5 சதவீதமாகவும், ஊரக நிரந்தர சொத்து முதலீடு 30. 5 சதவீதமாகவும், தொழிலக உற்பத்தி 11 சதவீதமாகவும், வீட்டு அடமானக் கடன் 48 சதவீதமாகவும் 2009ன் மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள் ளன.மேலும், 2009ன் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதம், இரண்டாவது காலாண்டில் 7.9 சதவீதம், மூன்றாவது காலாண் டில் 9.1 சதவீதம், நான்காவது காலாண்டில் 10.7 சதவீதம் எனப் படிப்படியாக வளர்ச்சி அடைந் துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) 245.5 லட்சம் கோடி ரூபாய் (அமெரிக்க டாலர் மதிப்பில் 4.91 ட்ரில்லியன்).இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.

ஜப்பானின் ஜி.டி.பி., 2009ல் 233 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது. அதன் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதம். இந்நிலையில், உலகப் பொருளாதார வங்கி வெளியிட்டுள்ள "உலகப் பொருளாதார அறிக்கை-2010'ல்,"உலகளாவிய நிலையில் பொருளாதார வளர்ச்சி 2009ல் 2.2 சதவீதமாக உள்ளது. 2010ல் இது 2.7 சதவீதமாகவும், 2011ல் 3.2 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும். பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் இருந்தாலும், நிதி நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார மீட்சி மிகக் குறைந்த வேகத்தில் தான் இருக்கிறது' என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

       சீனாவின் நிலை இப்படி இருக்கும்போது நாம் எப்போது இந்நிலையை அடைவது. நம் அரசியல்வாதிகள் அவர்களின் பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டு சட்டமன்றமோ, நாடாளமன்றமோ சென்று சண்டை போட்டுக்கொண்டு அவர்களது பிரச்சனையைபற்றி மட்டுமே பேசி செல்கின்றனர். எப்போதாவது மட்டுமே நாட்டைபற்றி பேசுகின்றனர்.
   
    அதுமட்டுமின்றி மாநிலத்தை பிரிப்பது, பஸ்சை மறிப்பது பற்றியே பேசுகின்றனர். நாட்டை, மக்களை உயர்த்த பாடுபடும் அரசியல் வாதிகளோ மிகவும் குறைவு.

இந்தியாவின் GDP 2004 ல் 8.30 %  மாற்றம் 93.02 %

2009 ல் 7.40 %  மாற்றம் -17.78 %



 



திங்கள், 25 ஜனவரி, 2010

ஆளில்லா வானூர்தி (Unmanned Aerial Vehicle)

மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக்கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன.
பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.
பொதுவாக இவ்வகை வானூர்திகள் அவற்றின் வடிவமைப்பு, அளவு, கட்டமைப்பு மற்றும் குணவியல்புகளிற்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பகாலங்களிலிருந்து ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமாகவே இயக்கப்பட்டுவந்த போதிலும், நவீன ஆளில்லா வானூர்திகள் தன்னியக்க கட்டுப்பாட்டுக் கருவிகளையும் கொண்டுள்ளன. இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு மூலமாகவோ அல்லது முற்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கேற்ப தன்னியக்கமாகவோ இயக்கப்படுகின்றது.
நவீன இராணுவப் பயன்பாட்டிலுள்ள ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்புப் பணி மட்டுமல்லாது தாக்குதல் நடாத்தும் திறன்வாய்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவைதவிர இராணுவப் பயன்பாடற்ற செயற்பாடுகளான தீயணைப்பு, பொதுப் பாதுகாப்புச் சேவையினரின் கண்காணிப்புப் பணி போன்றவற்றிலும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா வானூர்திகள் அவற்றின் பயன்பாட்டுரீதியாக ஆறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
1. எதிரிப் படைகளின் தரை இலக்குக்களைத் தாக்கியழித்தல் (aerial attack)
2. சமர்க்கள அவதானிப்புப் பணி (reconnaissance)
3. வான் யுத்தம் (dog fight)
4. வான்வழி இராணுவப் போக்குவரத்து
5. ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணி (research and development)
6. பொது மற்றும் வர்த்தகப் பணி (civil and commercial purpose)

இவ் ஆறு வகையான ஆளில்லா வானூர்திகளும் அவற்றின் பறப்பு வீச்செல்லை (range), பறப்பு உயரம் (altitude) போன்றவற்றின் அடிப்படையிலும் இவ்வகை வானூர்திகள் வகைப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க இராணுவம் பல்வேறுபட்ட ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பாகப் (unmanned aircraft system) பயன்படுத்திவருகின்றது. இவ்வகையான தொகுதிகளிலுள்ள வானூர்திகள் இணைக்கப்பட்ட வலையமைப்பினூடு இணைந்து செயற்படுவதுடன் தரையிலுள்ள துருப்புக்களுடன் தொடர்பைப் பேணி தகவல்களை வழங்குகின்றன. இவ்வகையான ஆளில்லா வானூர்தித் தொகுதிகளின் வலையமைப்பு Tier என்ற சொற்பதத்தினாற் குறிக்கப்படுகின்றது. இராணுவத் திட்டமிடலாளர்கள் தனித்துச் செயற்படும் வானூர்திகளை இவ் வலையமைப்பில் தொழிற்படும் வானூர்திகளிலிருந்து பிரித்தறிய இச் சொற்பதத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆளில்லா வானூர்தி தொகுதி வலையமைப்பானது பல்வேறுபட்ட வகையான ஆளில்லா வானூர்திகளைக் கொண்டிருக்கும். அகெரிக்க வான்படை மற்றும் அமெரிக்கக் கடற்படை ஆகியன தமக்கெனத் தனித்தனியான ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பைக் கொண்டுள்ளன. இவ்விரு தொகுதியமைப்புக்களும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றித் தனித்தனியாகவே இயக்கப்படுகின்றன.
ஆளில்லா வானூர்திகள் பல்வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவையாகக் காணப்பட்ட போதிலும், அவற்றின் பொதுவானதும் பெரும்பாலானதுமான பயன்பாடு ஏதோவொரு வகையான அவதானிப்புப் பணியாகவே காணப்படுகின்றது. போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் மிகக்குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.
அவதானிப்புப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் இவ்வகை வானூர்திகள் இராணுவம்சார் அவதானிப்பு நடவடிக்கை, தாவர மற்றும் விலங்குகளின் அவதானிப்பு, கடல்சார் அவதானிப்புப்பணி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையான பயன்பாட்டிற்காக கட்புல ஒளிப்படக்கருவி (visual light camera), அகச்சிவப்புக்கதிர் ஒளிப்படக்கருவி (infrared camera) மற்றும் ரேடார் அவதானிப்புக் கருவி போன்றன பயன்படுத்தப்படுகின்றன. வேறுசில சிறப்புப் பயன்பாட்டிற்காக நுண்ணலை உணரி (microwave sensor) மற்றும் புறஊதாக்கதிர் உணரி (ultraviolet sensor) போன்றனவும் பயன்படுத்தப்படுகின்றன. இவைதவிர வளியிற் காணப்படும் நுண்ணுயிர்கள் (microorganism) மற்றும் இராசயணப் பொருட்கள் போன்றவற்றை அவதானிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இவ்வகை வானூர்திகள் உயிரி உணரி (biological sensor) மற்றும் இரசாயண உணரி (chemical sensors) போன்றவற்றைப் பயன்படுத்துகினறன.
தற்காலப் பயன்பாட்டிலிருக்கும் கண்காணிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா வானூர்திகள் அதிலுள்ள கருவிகள் மூலம் அவதானிக்கும் காட்சிகளை உடனுக்குடன் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் அனுப்பிக்கொண்டிருக்கும். இதன்காரணமாக இவ்வானூர்திகள் எதிரிப்படைகளாற் சுட்டுவீழ்த்தப்பட்டாலும் அவதானிப்பின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தொலைவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஆரம்பகாலங்களிற் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஆளில்ல அவதானிப்பு வானூர்திகள் அவதானிக்கும் காட்சிகளையும் தரவுகளையும் அதனுள்ளிருக்கும் பதிவுக்கருவியிற் பதிந்து வைத்துக்கொள்ளும். வானூர்தி தளம் திரும்பியதும் அதனுள்ளிருக்கும் கருவியிற் பதியப்பட்டிருக்கும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
மனிதர்கள் செல்வதற்கு ஆபத்தானவையாகக் காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளில் இவ்வகை வானூர்திகளின் பயன்பாடு மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது. நவீன இராணுவங்களின் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி தாக்குதல் நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை வானூர்திகள் தரையிலுள்ள பாரிய எதிரித்தளங்களைத் தாக்கியளித்தற் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி தனிமனித இலக்குக்களை அழிக்கும் செயற்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன

சனி, 23 ஜனவரி, 2010

சாப்பிட்டுக்கொண்டே படிப்பது கண்ளுக்கு ஆரோக்கியமா ?

நிச்சயமாக ஆரோக்கியம் அல்ல!"  "அதுமட்டுமல்ல... இந்தப் பழக்கவழக்கங்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்ல, பெரும்பாலும் பள்ளி/கல்லூரி மாணவர்கள்தான் படுத்துக்கொண்டே படிப்பது, சாப்பிட்டுக்கொண்டே படிப்பது என்று ஈடுபடுகிறார்கள்.

அந்த வயதுக்காரர்களுக்குத்தான் கண் பார்வை தெளிவாக சீராக இருக்கும். அவர்களால் எப்படியும் படிக்கமுடியும்... பார்க்கமுடியும். இது டீன் ஏஜ்காரர்களுக்கு இயற்கை அளித்த வரம். ஆனால், குப்புறப் படுத்துக்கொண்டும் மல்லாந்து படுத்துக்கொண்டும் படிப்பதால் கண்களுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, தூக்கம் கண்களை முட்டும். அப்போது கண்கள் அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதை உணரவேண்டும். தொடர்ந்து அதே வழக்கத்தை அவர்கள் பின்பற்றினார்கள் என்றால், கண்களில் ஈரப்பதன் குறைந்து DRY EYES என்ற நிலை ஏற்படும். கண் சோர்வடைதல், தலைவலி முதலான பிரச்னைகள் ஆரம்பமாகும். பிற்காலத்தில் கண்ணாடி இல்லாமல் எந்த எழுத்தையும் படிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

படுத்துக்கொண்டே படிப்பதால், உடல் ஆரோக்கியம் குறையும் வாய்ப்பு உள்ளது. கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாற்றம் உடனே தெரியாது. போகப் போக பார்வையில் கோளாறு ஏற்பட்டு, நாற்பது வயதுக்குப் பிறகு, கண்ணாடியின் துணையின்றி இயங்கமுடியாத நிலைக்கு பாதிப்பு அடைவார்கள்.

அதேமாதிரி, பொழுதுபோக வேண்டுமே என்று சிலர் பஸ், ஆட்டோ, ரயில் பயணத்தின்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். அப்படிப் படிக்கும் சூழ்நிலையில் சீரான வெளிச்சமும் இருக்காது. பிரயாணக் குலுக்கலால் புத்தகத்துக்கும் கண்களுக்கும் தேவையான இடைவெளியை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. எழுத்துகள் ஒன்றன்மேல் ஒன்று விழுந்து, விழித்திரையிலும் அந்த எழுத்துகள் அலைபாய்ந்து, ஒரே இடத்தில் குவியாமல் காட்சிப்பிழை ஏற்பட்டு, மூளை தடுமாற்றம் அடையும்.

அதையும் மீறி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, விரைவில் பார்வைத் தடுமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.பயணத்தின்போது படிக்கிறவர்களுக்கு தலைவலி, கழுத்துவலி, வயிற்றைப் பிறட்டுதல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். அப்போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

சில குழந்தைகள் டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பார்கள்; சாப்பிட்டுக்கொண்டே படிப்பார்கள். இளைய வயதினரும் இந்தப் பழக்கத்துக்கு விதிவிலக்கு அல்ல. அப்படிப் படிப்பவர்கள் இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

இப்படி 'வாயில் சாப்பாடு, கையில் புத்தகம்' தவறான பழக்கம் என்று பெரியவர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். இல்லையென்றால் பின்னால் நிகழப்போகும் இடர்ப்பாடுகளை சந்திக்கப்போவது பெற்றோர்கள் இல்லை; பிள்ளைகள்தான்! இந்தப் பழக்கம் உள்ளவர்களுக்கு, நாற்பது வயதைக் கடக்கும்போது, மெதுவாக கவனச் சிதைவு ஏற்பட்டு, பார்வைத் தெளிவு இழந்து 'ரீடிங் கிளாஸ்' போடவேண்டிய கட்டாயம் ஏற்படும்! தொடர்ந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள், சீரான வெளிச்சத்தில் படிக்கவேண்டும். டியூப் லைட் வெளிச்சமே போதுமானது.

அந்த வெளிச்சம் நமக்கு இடது புறத்திலிருந்து வருவது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அது ஆரோக்கியமான வாசிப்புக்கும், சீரான கண்பார்வைக்கும் நல்லது. நீண்டநேரம் படிப்பவர்கள் 'டேபிள் லைட்' உபயோகிப்பது சரியாக இருக்கும். ஜன்னல் வழியாக வரும் சூரிய வெளிச்சத்தோடு, மின் விளக்கையும் எரியவிட்டு புத்தகத்தின் மேல் தேவைக்கு அதிகப்படியான ஒளியையும் உண்டாக்குவது கூடாது. வயது கூடக்கூட கண்ணுக்குத் தேவையான வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டும். காலை

அல்லது மாலை நேர சூரிய வெளிச்சத்தில் வாசிப்பது கண்களுக்கு ஆரோக்கியம். கண்களில் ஈரப்பதன் குறைந்து வறட்சி ஏற்படும் சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் சரியாக நிகழும்பட்சத்திலும்கூட உணவு முறைகளில் சத்தான காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால்தான் சிறுசிறு

பார்வைக் குறைகளையும் தவிர்க்க முடியும். நாள்தோறும் நாம் சாப்பிடுகின்ற உணவில், ஐந்து நிறங்களில் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், கீரை, மீன், பால், முட்டை, பப்பாளி போன்ற A வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்கள் கண் பார்வைக்கு நல்லது. இந்த உணவுமுறையைக் கடைபிடித்து வந்தால் 'கற்றல் அறிவு'க்குச் சுவைகூடும்!"

புதன், 20 ஜனவரி, 2010

பணம் சம்பாதிக்க செயற்கை பிரசவத்தை உருவாக்கும் டாக்டர்கள்

உலகம் முழுவதிலும் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் ஆசிய நாடுகளில் செயற்கை பிரசவம் (சிசேரியன்) அதிகரித்திருப்பது தெரியவந்தது.
2007-2008-ம் ஆண்டுகளில் மட்டும் சிசேரியன் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்களில் சிசேரியன் எண்ணிக்கை 65 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதற்கு உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் மெட்டின் கில்ம ஜோக்லு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ஆசியாவைச் சேர்ந்த இந்தியா- சீனா போன்ற நாடுகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெரும்பாலான தனியார் டாக்டர்கள் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் தேவையே இல்லாமல் சிசேரியன் செய்து விடுகிறார்கள். சிசேரியனை விட சுகப்பிரசவம்தான் நல்லது.

சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் கூடுதலாக ரூ. 20 ஆயிரம் கிடைக்கிறது என்பதால், அதை ஆதரிக்கிறார்கள். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிசேரியன் ஆபரேசன் செய்யும் தாய்- குழந்தைக்கு நிறைய பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. சில தாய்மார்களுக்கு கருப்பையை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. டாக்டர்கள் பலர் பண ஆசையில் தங்களது மனசாட்சியை அடகு வைத்து விடுகிறார்கள். மனிதாபிமானம் மிகுந்த டாக்டர்கள் யாரும் தேவையே இல்லாமல் சிசேரியன் செய்யமாட்டார்கள்.
சில பெண்களுக்குதான் பிரசவ நேரம் காலதாமதமானால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். ஆப்போது சிசேரியன் செய்வதை தவிர வேறு வழியில்லை.
சுகப்பிரசவம் ஆகக்கூடிய நிலையில் உள்ள பெண்களுக்கும் சிசேரியன் செய்து குழந்தையை எடுப்பதுதான் வேதனைப்படக்கூடிய, கண்டிக்கத்தக்க ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

Final Sence

Finelsence.com உங்கள் பிளாக்குக்கான சூப்பர் Templates அதுவும் இலவசமாக

 http://www.finalsense.com/services/blog_templates/index.htm 

என்ற முகவரியில் நூற்றுக்கணக்கான Templates இலவசமாக கிடைக்கிறது.

இங்கு உங்அளுக்கு தேவையான டெம்ப்லேட்டுகளை தேர்வு செய்து More Details என்ற பட்டனை அலுத்தவும் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் Code -ஐ காப்பி செய்து
உங்கள் பிளாக்கில் Templates>Edit Html ஏற்கனவே உள்ள கோடை அழித்துவிட்டு  finalsense.com ல் உள்ள கோடை Copy செய்து Paste செய்து Save Tempalte என்ற பட்டனை அழுத்தி சேமித்து உங்கள் பிளாக்கை புதுமையாக்கலாம்.

சனி, 2 ஜனவரி, 2010

வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எல்லோக்கும் எல்லாமே இன்பமயமாய்
இருக்கவேண்டும்

தமிழ் மொழியே எங்கெங்கும் சிறக்கவேண்டும்